Friday, December 31, 2010

2010-2011 தொடர்பதிவு

2010

என் சின்ன மகள் முதன் முதலில் பள்ளிக்கு சென்றது மிகவும் சந்தோஷமானது.
என் குழந்தைகள் போட்டிகளில் கலந்து பரிசுகள் வென்றது.
நான் பெஃட்னாவில் கலந்து கவிஞர் தாமரையிடம் சான்றிதழ் பெற்றது.
என்னிடம் பயின்ற மாணவிகள் பாட்டு போட்டியில் கலந்து பரிசு வென்றது.
என் குடும்பத்தோடு கானடா சென்று விடுமுறை நல்ல சந்தோஷமாக கழ்த்த்து.
எனக்கு தமிழ் குடும்பத்தில் பரிசு கிடைத்தது.
என் குழந்தையின் ஆர்ட் பெஃட்னா புஸ்தகத்தில் வந்தது.
என் குழந்தைகளுக்காக டிஸ்னி சென்று அவங்களோட சந்தோஷத்தை பார்த்து மகிழ்ந்தது.
என் வலதளம் தேவதையில் வந்தது.
எனக்கு வலதளம் வழி நல்ல புதிய நிறய்ய நட்புக்கள் கிடைத்தது என்றென்றும்
மறக்க முடியாதது.
என் தொடர்பதிவை ஏற்று தொடர்ந்த என் நட்புலகத்தர்ரை மறக்க முடியாது.
எனக்கு நிறய்ய அவார்ட்கள் குடுத்து என்னையும், என் வலைதளத்தையும்
கௌரவபடுத்தி மேலும் புத்துணர்ச்சி தந்து எழுத தூண்டிய என் நண்பர்களை என்றும்
மறக்க முடியாதது.
நிறய்ய பாலோவர்ஸ் வந்து போவதை நினைத்து பெருமைபட்டது.

2011.

வாழ்வில் நோய் நொடியின்றி, சந்தோஷமாக வாழ இறைவன் அருள் கிடைக்க
வேண்டும்

என் குழந்தைகள் நன்றாக படித்து பெரிய ஆளாக வேண்டும்.


என் வலையுலக நண்பர்களை நேரில் பார்க்க ஆசை.

நிறய்ய புதிய விஷய்ங்களை கற்று கொள்ள வேண்டும்.

மேலும் மேலும் நிறய்ய பலோவர்ஸ் வர வேண்டும்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 10, 2010

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’



"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’ எல்லோருக்கும் புது வருடம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிலும் சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ஏதாவது
ஒன்றை மனதில் நினத்து கொண்டு இந்த வருடம் கண்டிப்பா எப்படியாவது
செய்ய வேண்டும் என்ரு ஒரு உறுதி மொழி வைத்து கொளவது வழக்கம்.
உதாரணத்துக்கு சில பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நான்
இன்றில் இருந்து இனிமேல் கண்டிப்பா புகை பிடிப்பதை அறவே நிறுத்திட்டேன்,
சில பேர் இன்றில் இருந்து நான் உடற்பயிற்ச்சி தவறாமல் கடைபிடிக்க போகிறேன்.
என்று எத்தனை விதமோ நம்மிடம் இருக்கும்.

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’

2010 ஜனவரியில் இருந்து டிசம்பர் 2010 வரையில் நமக்கு எல்லார்க்கும்
ஏதாவது நல்ல சம்பவங்கள் அதுவும் மறக்க முடியாதவை இருக்கும்
இந்த தொடர் பதிவை எனக்கு ஒரு தோழி இ மெயிலில் எழுத சொல்லி டிசம்பர் 28 க்குள்
முடிக்க கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

நானும் இதை ஏன் என் வலைதள நட்புலக எல்லோருக்கும் எழுத அழைக்ககூடாதென்று யோசித்து உடனே அதை இனைத்து உங்க எல்லோரையும் இங்கே அழைக்கிறேன்.

.எதிர்பாராமல் நமக்கு சில நல்லவை கிடைத்திருக்கும் அல்லது அடைந்திருப்போம்
1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்(
2. மறக்க முடியாத சம்பவம்( சந்தோஷமானது)
3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு
4. அன்பு அல்லது பரிசுகள்
5. குழந்தைகள் இருந்தால் அவர்களின் மகிழ்ச்சியான விஷயம்
(குழந்தை இல்லாதவர்கள் கவலை வேண்டாம்,அவர்களுக்கு பிடித்த குழந்தைகளின்)
6. பிடித்த நல்ல மனிதர்கள்( அரசியல்வாதி, கலைஞர்கள்,உறவினர்கள்,நன்பர்கள்,நன்பிகள்)
7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது(புதிய ரெஸ்ட்ராண்டில்
சாப்பிட்ட அனுபவம்)
8. பிடித்த அல்லது மற்க்கமுடியாத இடங்கள்
9. வாழ்க்கையில் இந்த வருடத்தில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.(நல்லது,கெட்டது)
10 2010 ல் நிங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்னங்கள்.

எல்லா நட்புலக நண்பர்களும், நண்பிகளும் வந்து கலந்துகொண்டு எழுதினால் மற்ற எல்லோரும்
தெரியாத, தெரிந்த நல்ல விஷயங்களை நாமும் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

இதில் கலந்து கொள்ள

ராமலஷ்மி
ஸாதிகா
குறிஞ்ஞி
மல்லிக்கா
ஹூசைனம்மா
ஜலீ
நாட்டாமை
ஜெய்லானி
கவிதா
ஆஸியா

எனக்கு 10 பேர் தான் அழைப்பு குடுக்க சொல்லி ரூல்ஸ் குடுத்திட்டாங்க.
அதனால்
எனக்கு தெரிந்த 10 பேரை நான் இதில் எழுதுகிறேன்.
அவர்களை உங்களுக்கு முடிந்தால் தெரிந்தவர்களை தொடர் அழைப்புக்கு அழைக்கலாம்.

அவர்கள் இதோ

மேனகா
மஹி
அபி அப்பா
நாஞ்ஞில் மனோ
ஹைஷ்
ஆனந்தி
குறிஞ்ஞி
மனோ அக்கா
ஜெயஸ்ரீ
பவித்ரா
காஞ்சனா
வானதி
கவிதா
தேனம்மை
அஸ்மா



யார் யார் எழுதறிங்களோ அவர்கள் அவர்களுக்கு தெரிந்த 10 பேர்கள் தொடர் பதிவுக்கு அழைக்கவும்.

Thursday, November 4, 2010

Happy Diwali



Wish u a Happy Diwali to all my friends,followers and visitors.






Saturday, October 30, 2010

தீபாவளி அலங்கார தட்டு

தேவையானவை

பளாஸ்டிக்,தெர்மகோல்,எவர்சில்வர் எதாவது ஒரு தட்டு
கலர் டிஷ்யூ பேப்பர் அல்லது வெல்வட் துணி அல்லது பேப்பர்
க்ளூ
பழைய சிடி
விளக்கு ( அகல்விளக்கு, மெழுகுதிரி, சந்தன கிண்ணம்,குங்கும சிமிழ்) ஏதுவானலும் ஒன்று
கத்தரிகோல
அலங்கார மணிகள், அல்லது சமிக்கி,குந்தன், முத்து

செய்முறை

தட்டை டிஷ்யூ பேப்பரில் வைத்து வட்டமாக வெட்டி எடுக்கவும்.
துணியிலானும் சரி எதுவானலும் அந்த அளவில் வெட்டி வைக்கவும்.
தட்டில் பசை நல்ல தடவி வெட்டிய துணி அல்லது டிஷ்யூவை ஒட்டி காயவிடவும்
அதில் நடுவில் சிடியின் பின்புறம் பசை தடவி ஒட்டி காயவிடவும்.
சிடியின் நடுவில் மேல் பாகத்தில் ஒட்டை இருக்கும் இடத்தில் அதில் விளக்கு, அல்லது மெழுகுதிரி,கிண்ணம், அல்லது குங்குமசிமிழ் எது வேண்டுமானலும் வைத்து காயவிடவும்.
காய்ந்ததும் அதில் நம் கற்பனைகேற்ப்ப மணிகள்,குந்தன் கற்கள்,
முத்துகள் ஒட்டி நன்றாக காய்விடவும்.
விருந்தினர்களுக்கு பரிசாகவும், நம் வீட்டு பண்டிகைகளுக்கு உபயோகிக்கவும் செய்யலாம்.
பார்க்க நன்றாக பளிச் என்று மின்னும் அலங்காரத் தட்டு ரெடி.

Thursday, October 28, 2010

பீன்ஸ்&ப்ளம்ஸ்



எங்க வீட்டு தோட்டத்தில் இந்த வருடம் விளைந்த பீன்ஸ் & ப்ளம்ஸ்

Saturday, October 16, 2010

நவராத்திரி






இந்த வருட நவராத்திரி எங்க வீட்டு கொலு.
என் சின்ன மகள் பார்க் செய்தாள்.
இன்று ஒன்பதாம் நாளாகிய சரஸ்வதி, ஆயூத பூஜை செய்வது வழக்கம்.
காலையில் குளித்து தேவிக்கு சர்க்கரை பொங்கல், கொண்டகடலை சுண்டல், வடை, பாயசம் செய்து எல்லா புத்தகஙகளும், ஆயூதங்கள்,சங்கித வாத்தியங்கள், கார், போன்ற எல்லாவற்றுக்கும் குங்குமம்,மஞ்சள் இட்டு பூக்கள்,அட்சதை போட்டு நிவேதனம் செய்து வருகிறவர்களுக்கும் அந்த ப்ரசாததை கொடுத்ப்பது வழக்கம்.
விஜயதசமி நாளாகிய நாளை குளித்து பூக்கள் அட்சதை போட்டு பூஜையில் வைத்திருக்கும் புஸதகத்தை எடுத்து ஒரிரண்டு வரிகள் படித்து, பாட்டு பாடி
பாயசம், பழம் போன்றவை வைத்து நிவேதனம் செய்து, கொலுவுக்கும், மங்கல ஆரத்தி எடுத்து ஒரிரண்டு பொம்மைகளை படுக்க வைப்பது வழக்கம்.
பின் அதை எடுத்து உள்ளே வைத்து அடுத்த முறை எடுத்து இதே போல் கொண்டாடுவது வழக்கம்.

Wednesday, October 13, 2010

சிலி தாமிர சுரங்க மீட்பு




ஆகஸ்ட் 5 தாமிர கனிமச் சுரங்கம் 700 மீட்டர் ஆழத்தில் இருந்தபோது சுரங்கம் மண்,பாறை,கல் போன்றவர்றால் மூடிகொண்டது.

சுரங்கத்தில் சிக்கி கொண்டு க்டந்த 69 நாட்களாக மண்னுக்குள் புதையுண்டு இருந்த 33 பேரை சிலி நாடு அரசு நல்ல விதமாக 33 பேரையும் மீட்டனர்.


சுரங்கத்தில் இருந்த 33 பேர்களுக்கு அவரவர் சொந்தகளின் அன்பு கடிதங்கள், மருந்துகள்,
குடிநீர், திரவ உணவு போன்றவற்றை அனுப்பி அவர்களை காப்பாற்றி கொண்டும் மனதுக்கு
தெம்பும், உற்சாகமும் அளித்து கொண்டு இருந்தார்கள்.
அதில் ஒருவர் தலைவராக நியமித்து அவர சொல்வதை கேட்டு ஒற்றுமையாக நடந்து கொண்டார்கள்.2 பேரின் உணவை 17 நாடகள் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

சிலி நாட்டு அரசு இதை வெற்றிகரமாக நடத்த்தினார்.
செபாஸ்டின் பினேரா சீலி நாட்டு தலைவர் இதை நல்ல வெற்றிகரமாக் எல்லோரையும் மீட்டு
அந் நாடு ஒரு ரிக்கார்டை பதிப்பித்தது.
இந்த ஒரு எலிவேட்டர் (Capusule) நீளமான காஜ் செய்து அதை
பத்திரமாக கீழே இற்க்கி முதலில் ஒரு டாக்டர்ரை அனுப்பி பரிசோதனைகள் நடத்தி பின் ஒவ்வொருத்தராக கீழே இருந்து மேலே ஏற்றி வந்தது.

சிலி நாடு வெற்றிகரமாக எல்லா சுரங்க தொழிலாரர்களையும் மீட்டனர்.
அவரவர் சொந்தகாரகளை பார்த்து ஆனந்த கண்ணிரும் தழுவலுமாக கண்னுக்கும், மனதுக்கும்
சந்தோஷமாக இருந்தது.
33 பேரும் வந்ததும் அந்நாட்டு தேசிய கீதம் பாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதை உலகம் முழுதும் பாராட்டுகள் தெரிவித்தார்கள்.

Monday, October 11, 2010

தேவதையில் விஜிஸ் க்ரியேஷன்ஸ்


தேவதை இதழில்
இந்த மாத தேவதை இதழில் என் வலைதளம் வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செதியை தெரிவித்து கொள்கிறேன்.

தேவதை இதழை நான் விடாமல் படித்து வருகிறேன். இந்தியாவில் இருந்து என் சிஸ்டர் தொடர்ந்து இதுவும், மங்கையர் மலரும் அனுப்புவிடுவாங்க.நானும் இதுவரைக்கும் விடாமல் விரும்பி படிக்கும் இதழ்கள்.


தேவைதை ஒரு நல்ல இதழ் என்பதை நான் சொல்லி தெரிவதை விட உங்க எல்லோருக்கும் தெரிந்திருக்கும், எல்லா இல்லதரசிகளுக்கும், பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரு நல்ல பயனுள்ள மாதமிருமுறை இதழாக மலருகிறது. நல்ல பயனுள்ல தகவல்கள், செய்திகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் இந்த தேவதை.
இதில் வெளியிட்ட் திரு நவநீதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதில் என்னுடைய்ய வலைதலமும் வந்துள்ளது என்று கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிங்க எல்லாரும் பார்த்து படித்துவிட்டு சொல்லுங்க. என் தோழி விஜி க்ராப்ட்ஸ் விஜி அவரகள் சொன்னாங்க. அவர்களுக்கும் என்
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.





Friday, October 8, 2010

Happy Birthday





இன்று என் மகள் அக்‌ஷ்யாவின் 10 வது பிறந்தநாள்.

எல்லோரையும் என் மகளும் நாங்களும் பார்டிக்கு வாங்க என்று அன்புடன் அழைக்கிறோம்.
கேக்+பார்டி.
என் மகள் இப்ப பிறந்தது போல் இருந்தது, அதற்க்குள் காலங்கள் வேகமாக போய்விட்டது போல் தோன்றுகிறது.
அவளுக்கு என் சின்ன பென் திவ்யாவும் நானும் சேர்ந்து ஒரு கார்ட் செய்து பரிசளித்தோம்.
இதோ அது தான் இது.
உங்க எல்லோருடைய்ய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் எப்பவும் என் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நானும் என் மகளும் உங்க எல்லோருக்கும் மனமாற நன்றி கூறி கொள்கிறோம்.









Tuesday, October 5, 2010

வீட்டிலேயே லைப்ரரரி







வீட்டிலேயே லைப்ரரி
புஸ்தகங்கள் நிறய்ய படிப்பவர்களுக்கும், வீட்டில் நிறய்ய புஸ்தகங்கள் இருந்தும் அதை அவசரத்திற்க்கு எடுப்பதற்க்கு அவதிபடுகிறவர்களுக்கும் இதோ இதே போல் இருந்தால் நாம் எடுப்பதற்க்கும், நம் அவசரத்திற்க்கு உடனே தீர்வு கிடைத்திடும்,

சிலர் வீட்டில் புத்தகங்கள் நிறய்ய வைத்திருப்பார்கள்.
அதை அழகாக லேபல், கூடை, ட்ரே போன்றவற்றில்
அடுக்கி வைக்கலாம்.
நிங்களும் இதே போல் செய்தால் புத்தகங்கள் அங்கும் இங்குமாக
கிடக்காமல் எல்லா புத்தகங்களும் ஒரே இடத்தில் இருக்கவும் செய்யும்.
அவரவர் வசதிகேற்ப்ப ஒரு அலமாரி, ஷெல்ப், ப்ளாஸ்டிக், மரம்
ஏதுவானலும்அதில் சின்ன ப்ளாஸ்டிக் ட்ரே அல்லது கூடை,
இதில் ஏதாவது ஒன்றை விருப்பதிற்க்கும்,வசதிக்கும் தகுந்தாற்போல் வாங்கி அதில் மார்க்கர், அல்லது பேனாவினாலோ வேண்டிய தலைப்புகள், முடிந்தால் சில புத்தகங்கள் தொடர் புத்தகங்களாக இருக்கும் இருந்தால் அதன் வரிசை படி 1 முதல் 8 வரை என்று எழுதி அதன் படி அடுக்கி வைத்தால் பார்க்கவும், படிக்கவும் வசதியாகவும் இருக்கும்.

குழந்தைகள் புத்தகங்கள்,

ஸ்கூல் ஹோம் வொர்க் புத்தகங்கள்

பெரியவர்கள் படிக்கும் புத்தகங்கள்

வாரா,மாத இதழ்கள்,

இப்படி அவரவர் வீட்டில் இருக்கும் புத்தகங்களை ஒழுங்கு முறையில் அடுக்கினால் எல்லாருக்கும் வசதியாக இருக்கும்.
இடம் இருந்தால் அந்த இடத்திலேயே உட்கார்ந்து படிக்க ஒரு சின்ன சேர்
இருந்தால் எடுத்து படித்து அங்கே மறக்காமல் எடுத்த இடத்திலே திரும்ப வைக்கவேண்டும் ( அது தான் இதில் கவனிக்க வேண்டியது) மாற்றி வைக்ககூடாது.

முடிந்தால் நிங்க படித்து முடித்த உங்களுக்கு தேவையில்லை என்றால் அதை லைப்ரரரிலே குடுக்கலாம் அல்லது பள்ளியில் கூட கேட்டு குடுக்கலாம்.மற்றவர்களும் அதை பயன்படுத்துவார்கள்.
இந்த முறை எல்லோருக்கும் பயன்படும்.

Sunday, October 3, 2010

க்யூபெக்கில் காந்திசிலை ( Gandhi Statue in Quebec)





கனடாவில் காந்தி சிலை
நம்ம காந்தி அவர்கள் எங்கும் இருப்பார் என்பது உறுதி எல்லாருக்கும்
தெரிந்து இருந்தாலும்,இந்த காந்தி ஜெயந்தி தினத்திற்க்கு நான் குறிப்பிட பெருமை படுகிறேன்.
நான் பார்த்ததை உங்க எல்லோருடனும் பகிர்ந்துக்க தோன்றியது.
இதோ கனடாவில் பார்த்தது.

இந்த சிலையை நாங்கள் கனடாவில் க்யூபெக் சிட்டி பார்லெமெண்ட் வளாகத்தில்
பெரிய தேச தலைவர்கள் சிலைகளை எல்லாம் பார்க்க முடிந்தது.
ஆனல் நம்ம காந்தி அவர்களின் சிலை நல்ல அழகான புத்தம் புது
தோற்றத்துடன் பார்க்க நன்றாக இருந்தது.
இந்த சிலையில் முன்ப ஆங்கிலத்திலும் பின்பு
ஹிந்தியிலும் முழு பெயர்,தோற்றம் மறைவு
எல்லாம் இரண்டு மொழிகளிலும் பொரிக்கபட்டிருந்தது.
இந்த சிலையின் முன் எங்கள் குடும்ப புகைபடம் ஒன்றும் எடுத்து கொண்டோம்.
என் குழந்தைகளுக்கு விளக்கி சொல்லி கொடுத்தோம்.
நம்ம அறியாமலே அந்த சிலையை பார்த்ததும் ஒரு கணம் நம் கால்கள்,கண்கள் எல்லாம் அப்படியே நின்று நம் தாய் நாட்டிற்க்கே போனது போல் ஒரு நிம்மதியுடன் நின்று பார்வையிட்டோம்.
இதோ நிங்களும் பார்க்கலாம்,
நான் உங்க எல்லோரையும் க்யூபெக் நகரத்திற்க்கு கூட்டிகொண்டு போகவில்லை என்ற கவலை வேண்டாம்.

மீண்டும் நிறய்ய க்யூபெக் படங்களோட அந்த நாட்டு கலாசரம்,உணவு எல்லாவற்றையும் நான் அடுத்த பதிவில் உங்களை ச்ந்திக்கிறேன்.
அதுவரைக்கும் இத படியுங்க, சொல்லுங்க.

Friday, September 17, 2010

பேப்பர் டேபிள் மேட்(Paper Mat)


இது என் மகள் அவ ஸ்கூலில் செய்தது.

Friday, September 3, 2010

ப்ளம்ஸ்,பீன்ஸ்(Plums&Beans)











இன்னும் பீன்ஸ் அறுவடை ஆகல்லை.


Monday, August 30, 2010

ப்ளாஸ்டிக் கேன்வாஸ் பூ( Plastic Canvas Flower)

I learned from this my sister.

தேவையானவை

விரும்பிய வடிவில் ப்ளாஸ்டிக் கேன்வாஸ் ஷீட் -
விரும்பிய கலரில் வூல்லன் நூல்
பெரிய கன் ஊசி

செய்முறை

ஷீட்டில் முனையில் இருந்து மேலும் கீழுமாக கோர்த்து எடுக்கவும்.
கற்பனைகேற்ப்ப செய்யலாம்.
செய்வது ரொம்ப எளிது.
நிங்களும் செய்து பாருங்க.

Wednesday, August 25, 2010

Varalakshmi nombu வரலஷ்மி நோன்பு பூஜை







இந்த நோன்பு ஆடி மாதத்தில் எல்லா தெலுகு, தமிழ் வீட்டில் கொண்டாடுவார்கள்.
மாமியா வீட்டில் கொண்டாடுவதாயிருந்தால் தலைமுறையாயி கும்பிட்டு வழிபடுவார்கள்.
இது வெள்ளிகிழமையில் கொண்டாடுவார்கள்.
சில பேர் மாமியார் வீட்டில் இல்லை என்றாலும் படம் வைத்து அஷ்டோத்திரம் செய்து
நை வேத்யம் செய்து வ்ழிபடுவது வழக்கம். அம்மனுக்கு அலங்காரம் செய்து, வீடு வாசல் எல்லாம் நன்றாக கழுவி சுத்தம் செய்து,வாழை, மஞ்சள் குலை,எல்லாம் கட்டி அலங்கரித்த மனையில் அம்மனை வைத்து வழிபடுவது வழக்கம். சிலர் வீடுகளில் படம் வைத்து, சிலர் வெள்ளி சொம்பில் அம்மன் முகம் வைத்தும், சில சுவரில் படம் வரைத்தும் செய்து வழிபடுவது வழக்கம்.
இதற்க்கு மஞ்சள் கயிரை வைத்து பூஜை செய்து கையில் கட்டுவார்கள்.
சுமங்கலிகளை அழைத்து மஞ்சள்,குங்குமம், வெற்றிலை ப்ரசாதம் குடுத்து ஆசிர்வாதம் வாங்கி கொள்வார்கள்.
இதற்க்குபழம்,பச்சரிசி இட்லி, பாயசம், வடை, கொழுக்கட்டை, கொத்து கடலை சுண்டல்,புளியோதரை, லெமன் ரைஸ் போன்றவற்றை செய்து அம்மனுக்கு நைவேத்யம் செய்து வணங்குவது வழக்கம்.

எங்க வீட்டிலும் செய்வது வழக்கம்.

Sunday, August 22, 2010

Happy Onam ஓணம் பண்டிக்கை


Wish all my readers,Facebook friends,followers

a very Happy Onam


Regards
Viji

Saturday, August 14, 2010

சுதந்திர தின வாழ்த்துக்கள்.


எல்லா இந்திய மக்களுக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Sunday, August 8, 2010

Vacation


I will be back soon.

Tuesday, August 3, 2010

blogs Introductions


This is a small help and then we know that each & everyone.
Whoever intersted pls join this blog introduction.
Some of friends already know each other even though lot of other friends does't know. So, pls
whoever intersted introuce your blogs and your friends blogs too.
1. Arts blogs
2. Cooking blogs
3. Information blogs
4.Poems blogs
5.Stories blogs
6.Yoga
7.Health
8.Music
9.Hobbies
10 General
11.New subjects pls welcome


This blog introduction is going till Sept End. One of the famous magazine is intersted to collect the name of variety wise blogs.
Pls whoever intersted just send blog names.
Each one is to collect at least 5 blogs.
Sept 30 is last date.

Thanks









Monday, August 2, 2010

க்ராமம village Drawing


இந்த ட்ராயிங் என் மகள் அக்‌ஷயா வரைந்தது.


இது பெஃட்னா விழா மலரில் வந்துள்ளது.



Tuesday, July 27, 2010

ஜுவல்லரிஸ்(Jewelleries)











நானும் என் தோழியும் சேர்ந்து செய்தது.
முதல் முறை செய்தது.
ரொம்ப சிம்பிள் தாஙக் நிங்களும் செய்து அசத்தலாம்.
சென்னயில் எல்லாமே ரெடிமேடாக கிடைக்கிற்து.
இங்கும் சில பொருட்கள் ரெடிமேடா கிடைக்கும்








Friday, July 23, 2010

க்ராப்ட்ஸ்(Summer Playdate Crafts)






















சம்மர் விடுமுறையானதினால் என் மகள் தன் தோழிகளுடன் ப்ளேடேட் அன்று செய்த சில சின்ன க்ராப்ட்ஸ் இதோ, பார்த்துவிட்டு சும்மா போன எப்படி நிங்களும் ஏதாவது உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க, கேட்டால் சந்தோஷமா இருக்கும்.



இங்கு சம்மர் விடுமுறை நடக்கிறது. அதற்க்கு பிள்ளைகள் தங்களுடன் படிக்கும் தோழிகளுடன் கலந்தோசித்து ஒரு நாள் உன் வீட்டில் நான் வருவேன் ஒரு நாள் நீ என் வீட்டிற்க்கு வா என்று பேசி நன்றாக ப்ளான் செய்து என்னவெல்லாம் விளையாடலாம் எங்கெல்லாம் போகலாம் என்று கலந்தோசித்து செய்வது வழக்கம்.


முதலில் என் மகள் தன் தோழி விட்டிற்க்கு சென்றால் அங்கு வேற தோழிகளும் வந்து எல்லாரும் அவங்க வீட்டில் நீச்சல் குளம் இருக்கு அங்கு நன்றாக விளையாடிட்டு சாப்பிட்டு அடுத்தது யார் வீட்டில் என்று முடிவெடுப்பார்கள்.


அடுத்து எங்க வீடு வந்தாங்க எல்லாரும் சேர்ந்து முதலில் க்ராப்ட்ஸ், அடுத்து

பெயிண்டிங்,அடுத்து slide,sweing,bouncing, soccer,skipping,insturmental music,story telling lunch என்று ப்ளான் அதில் முதலவதாக க்ராப்ஸ்.


என் மகள்+அவ தோழி சேர்ந்து செய்த இந்த க்ராப்ஸ்.

ஒர்காமி பேப்ப்ரில் கப்ஸ்
செனியல் ஒயரில் ஹனி பி
செனியல் ஒயரில் ப்ளவர்
செனியல் ஒயரில் குரங்கு
பீட்ஸில் பேரேஸ்லெட்

தேவையானவை
Chenille Sticks
Scissors
Glue
Card Stock or construction paper


Tuesday, July 20, 2010

Strawberry Picking Birthday Party

















ராஸ்பெர்ரி பர்த்டே பார்டி
என் மகள் திவ்யா ஜூன் 30 - 4 வது பிறந்த நாளை அவ பள்ளி தோழிகள்,தோழர்கள், குடும்ப நண்பர்களோடு ராஸ்பெர்ரி தோட்டத்தில் வைத்து இனிய பிறந்தநாள் கேக் வெட்டி சந்தோஷமாக கொண்டாடினோம்.எல்லாரும் வந்து வாழ்த்தியதை நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு கொண்டடினோம்.
என் மகள் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் தான் வைக்க வேண்டும் என்று தன்னோட விருப்பத்தை 4 மாதங்களுக்கு முன்பே தெரிவித்தால், ஆனால் எல்லா இடமும் விசாரித்ததில் சீசன் முடிந்து இப்போ ராஸ்பெர்ரி தான் என்று எல்லா இடமும் சொல்லிவிட்டங்க ஆனால் வேறு வழியில்லாமல் அவளை சமதானம் செய்து ராஸ்பெர்ரி தோட்டதில் வைத்து கொண்டாடினோம்.மிக நன்றாக இருந்தது.
Hey Ride, Moon Bounce, Animal Feeding,Rasberry Picking,

எல்லாரும் வந்தவுடன் முதல் ஹே ரெய்ட்(வைக்கோல் நிறய்ய வைத்து ஒரு பெரிய ட்ராக்டர்) அதில் அந்த தோட்டம் முழுவதும் சுற்றி காட்டுவாங்க.(எல்லாரையும் ஒரே ட்ரிப்பில்) உண்மையிலே அது ரொம்ப நன்றாக இருந்தது. அந்த ட்ரக்கில் எல்லாரும் குழந்தை முதல் பெரியவர் வரை ஒன்றாக அமர்ந்து
பாட்டு டான்ஸ், ஸ்டோரி டெல்லிங் என்றும் எல்லாம் அதில் இருந்து கொண்டே பாடி, ஆடி ஊர்வலமாக சுற்றி வந்து பின்பு மூன் பவுன்ஸிங், ஆடு, கோழி,பேர்ட்ஸ்,முயல இவைகளுக்கு எல்லாம் ஆகாரம் குடுப்பது அதுவும் இங்கு ஒரு விளாயாட்டு போல் ஒரு சின்ன பௌலில் எல்லா ஸீட்ஸ் எல்லாம் போட்டு எல்லா குழந்தைகளுக்கும் கையில் குடுத்து அவங்களே போய் அதன் வாயில் குடுக்கவேண்டும். அது எல்லா குழந்தைகளும் குடுத்து என்ஞாய் பன்னினாங்க. அடுத்து டிபன், ஆப்பிடைசரில் ஆரம்பித்து,சமோசா, சிப்ஸ், குக்கிஸ் என்று அதை முடித்ததும் பீட்ஸா, என் தோழிகளின் சில பேரின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாங்க அவங்க சில பேர் பிட்ஸா சாப்பிட மாட்டர்கள் அவர்களுக்க்கா வீட்டில் வெஜ் ரெடிமேட் சேவை(அதில் எல்லா காய்கறிகளும் சேர்த்து சாட் மசாலா போட்டு , லெமன் ஜூஸ்) சேர்த்து செய்திருந்தேன் அதுவும், டீ, குளிர் பானங்கள், லெமனேட், போன்றவை எல்லாம் சாப்பிட்டு பின்பு ஒரிரண்டு விளையாட்டுகள் விளையாடி கேக் கட்டிங் முடிந்து இறுதியில் ராஸ்பெர்ரி பறிப்பது அதுவும் எல்லாரும் ஒன்றாக அந்த தோட்டதில் வேலை பார்க்கும் ஒரு கெய்டை நமக்கு கூட அனுப்பி எந்த வரிசையில் நாம் பறிக்கவேண்டும் எவ்வளவு நேரம் பறிக்க வேண்டும் என்பதை சொல்லி அழைத்து சென்றார்கள், எல்லாருக்கும் ஒரு கூடை குடுத்து அதில் எவ்வளவு நிரப்ப முடியுமோ நிரப்பலாம்.
குழந்தைகளுக்கு எல்லாம் நன்றி சொல்லி எல்லா குழந்தைகளுக்கும் வந்து கலந்துகொண்டு என் மகளின் பர்த்டே நினவாக சின்ன பரிசுகளை எல்லார் கையிலும் கொடுத்து நன்றியை தெரிவித்து நாங்களும் எல்லா பரிசுகள், மீதியிருக்கும் கேக், பீட்ஸா எல்லாவற்றையும் முடிந்தவரைக்கும் அங்கு வந்தவர்களுக்கே யார் யாருக்கெல்லாம் கேக், பீட்ஸா, சமோசா வேண்டுமோ எடுத்து கொள்ளுங்க என்று சொல்லி வேண்டியவர்கள் எடுத்துவிட்டு மீதமானதை நாங்களும் வீட்டிற்க்கு எடுத்து வந்தோம்.நன்றாகவே இருந்தது.